கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். ஆய்வுகூடம் திறக்கப்பட்டது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை ஆய்வுகூடம் திறக்கப்பட்டுள்ளது.

  மூலக்கூற்று உயிரியல் வைத்திய ஆய்வுகூடம் என அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு பி.சி.ஆர். இயந்திரங்களும், இரண்டு- நியூக்ளிய அமிலங்களை பிரிக்கும் தன்னியக்க இயந்திரங்களும், மூன்று பாதுகாப்புப் பெட்டகங்களும் நிறுவப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 500 விமானப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ஆய்வுகூடம் அமைந்துள்ளது.  

 பரிசோதனை ஆய்வுகூடத்தின் மதிப்பு சுமார் 70 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!