நம்பிக்கை குறைந்து வருகிறது – சாய் பல்லவி

மனித இனத்­தின் மீதான நம்­பிக்கை தமக்கு வேக­மாக குறைந்து வரு­வ­தா­கச் சொல்­கி­றார் சாய் பல்­லவி.

குர­லற்­ற­வர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக கொடுக்­கப்­பட்ட அதி­கா­ரம் தவ­றாகப் பயன்படுத்தப்படுவ­தா­க­வும் இந்நிலை நீடிக்கக் கூடாது என்றும் அவர் தமது அண்­மைய டுவிட்­டர் பதி­வு ஒன்றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“பல­வீ­ன­மா­ன­வர்­கள் காயப்படுத்தப்படுகின்றார்கள். சிலர் தங்­க­ளது அரக்­கத்­த­ன­மான ஆசைகளை நிறை­வேற்­றிக்கொள்ள குழந்­தை­க­ளைக் கொல்கிறார்கள்.

நாம் கடக்­கும் ஒவ்­வொரு நாளும், இயற்கை மனித இனத்­தைச் சுத்­தி­க­ரிக்க எண்ணுவதாகவே தோன்­று­கிறது.

இப்­ப­டிப்­பட்ட நிகழ்­வு­க­ளைப் பார்த்து எது­வும் செய்ய இய­லாத பய­னற்ற, மோச­மான வாழ்வை வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம். நாம் வாழும் இந்த மனி­தத்­தன்­மை­யற்ற உல­கம் இன்­னொரு குழந்­தை­யின் பிறப்­புக்­குத் தகு­தி­யா­னது அல்ல” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!