உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகார பூர்வமாக வெளியேறியது. இதற்கான கடிதத்தை ஐ.நா பொதுச் செயலாலரிடம் அமெரிக்கா வழங்கியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விஷயத்தில், உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாக கூறி, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
உலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் ட்ரம்ப் அறிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பின் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதியை ட்ரம்ப் நிறுத்தினார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகார பூர்வமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியா குத்ரசிற்கு கடந்த 6-ஆம் திகதி அமெரிக்க கடிதத்தை அனுப்பியுள்ளது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் திகதி தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.