விமான நிலையத்துக்கு ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் முனையத்திலுள்ள விருந்தினர்களுக்கான பகுதிக்குள், ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த அனுமதி வழங்கப்படுகின்றது என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

பயணிகளும், உடன் செல்பவர்களும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நடந்துகொள்வது கட்டாயம் எனவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முதல் பயணிகள் மற்றும் ஊழியர்களைத் தவிர விமான நிலையத்துக்குள் விருந்தினர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் பயணிகளுடன் மூவர் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஐவர் செல்வதற்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!