கொழும்பு கடலோரப் பொலிஸ் நிலையம் மூடல்
கொழும்பு கடலோர பொலிஸ் நிலையம் கொரோனா அச்சம் காரணமாக நேற்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 80 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடலோரப் பொலிஸ் நிலையச் செயற்பாடுகள் தற்காலிகமாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.