நாளை வானில் தோன்றுகிறது ‘புளூ மூன்’
புளூ மூன் என்ற சொல் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கும் சந்திரனின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சில சமயங்களில் பௌர்ணமி நிலவு நீல நிறமாக தெரியும்.
வழக்கமாக, மாதந்தோறும் ஒரு பவுர்ணமி, ஒரு அமாவாசை ஏற்படும். எப்போதாவது, ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி ஏற்படும். அந்த இரண்டாவது பவுர்ணமி, ‘புளூ மூன்’ எனப்படும், நீல நிற நிலா’ என, அழைக்கப்படுகிறது.
இது, நீல நிறத்தில் தெரிவதில்லை. மற்ற நாட்களை போலவே தெரியும். ஆனாலும், அறிவியல் ரீதியாக நீல நிலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம், மும்பை நேரு கோளரங்கத்தின் இயக்குனர் அரவிந்த் பரஞ்சிபயே கூறுகையில்,
அக்டோபர் 1-ம் தேதி பவுர்ணமி வந்தது. இரண்டாவது பவுர்ணமி, அக்., 31 இரவு, 8:19 மணிக்கு தோன்றுகிறது. நிலவு தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்கு, 29.531 நாட்கள் அல்லது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடம், 38 வினாடிகள் ஆகிறது. கூடுதல் நேரத்தைச் சேர்க்கும் போது, ஒவ்வொரு, 30 மாதங்களுக்கு ஒருமுறை, ‘நீல நிலா’ நிகழ்வு ஏற்படுகிறது. பிப்ரவரியில், 28 அல்லது 29 நாட்கள் என்பதால் வாய்ப்பே இல்லை. அடுத்த நீல நிலா, 2023 ஆக., 31ல் ஏற்படும். கடைசி ப்ளூ மூன் மார்ச் 31, 2018 அன்று நடந்தது இவ்வாறு அவர் கூறினார்.