கம்பஹா மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, அத்தனகல்ல, மீரிகம உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 361,725,000 ரூபா நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.