கம்பஹா மாவட்டத்தின் பல இடங்களில் ஊரடங்கு

கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தொழிற்சாலையின் ஊழியர்கள் அதிகமாக வசிக்கும்  கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

  தொற்றுப் பரவும் அபாயம் நிலவுவதால் அந்தப் பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் பலர் சுகாதாரப் பிரிவுக்குத் தகவல் வழங்காது தலைமறைவாக இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வத்தளை, கந்தானை, ஜா-எல , களனி, பேலியாகொட, ராகம, கடவத்த ஆகிய பிரதேசங்களில் இருந்து அந்தத் தொழிற்சாலைக்குச் செல்வோர் தங்கி இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வெலிசறையில் உள்ள இன்னுமொரு ஆடைத்தொழிற்சாலையிலும் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
இதேவேளை, கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்குச் சிகிக்சையளித்த கம்பஹா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!