உண்மையான ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்த தேசப்பிரிய

“சிறு தொகையினராக உள்ளவர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பத்துக்கு இணங்க ஏற்படுத்தப்படும் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம்.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று விஜயம் செய்த அவர், இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“பெரும்பான்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள்தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையான ஜனநாயகம் என்பது அவ்வாறு அல்ல. ஜனநாயக ஆட்சியில் மாத்திரமல்ல சாதாரணமாக ஒரு மரணச்சடங்குகளில் கூட பெருந்தொகையினர் சிறுதொகையினரது உரிமைகளை நசுக்கி செயற்படும் விதத்தை நாம் காண்கின்றோம்.

பெரும்பான்மை இனத்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நாம் தேர்தலை நடத்தினால் சிறுபான்மை இனத்தவர்களின் விருப்பம் மறுதலிக்கப்படுகின்றது. ஆகவே, ஒரு வர்ணத்தால் தீட்டப்படும் ஓவியம் அழகாக இருக்காது. எனவே, சிறுபான்மையினருக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!