யாழில் விபத்து: காயமடைந்த தாயும் பிள்ளையும் வைத்தியசாலையில்
யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த தாயும் பிள்ளையும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
நாவலர் வீதி, கச்சேரி – நல்லூர் வீதி சந்தியால் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள், கச்சேரி – நல்லூர் வீதியில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டுள்ளனர், கார் வீதியோரமாக உள்ள தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளது.