கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 77.3 கிலோ எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய, பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார லியககேவின் உத்தரவுக்கு அமைய நேற்று அந்தப் பிரதேசத்தில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வெளி இடங்களுக்குக் கொண்டு செல்வதற்காகக் குழுவொன்றால் அந்தப் பிரதேசத்துக்கு எடுத்துவரப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும், படகு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைதுசெய்யவதற்காகக் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.