ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறுகிறார் காரேத் பேலே
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/09/karadd-2018-19_yl9chp006bgw1hl4nfef46kck-1024x576.jpg)
ரியல் மாட்ரிட் அணிக்கு முக்கியமான கட்டத்தில் வெற்றியைத் தேடிக்கொடுத்த காரேத் பேலே அங்கிருந்து வெளியேறி டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு செல்கிறார்.
உதைபந்தாட்டப் போட்டியில் முக்கிய வீரர்களில் ஒருவராக வேல்ஸ் நாட்டின் காரேத் பேலே-வையும் கருதலாம். இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார்.
ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய எதிரி அணியான பார்சிலோனாவுக்கு எதிராக 251 போட்டிகளில் விளையாடி 105 கோல்கள் அடித்துள்ளார். 68 கோல்கள் அடிக்க துணை புரிந்துள்ளார். இவருடைய துணையுடன் 13 கோப்பைகளை ரியல் மாட்ரிட் அணி வென்றுள்ளது. இதில் நான்கு சாம்பியன்ஸ் லீக், இரணடு லா லிகா, ஒரு கோபா டெல் ரே ஆகியவை அடங்கும்.
காரேத் பேலே கடந்த சில மாதங்களுக்கு மேலான அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஆனால் களத்தில் இறங்கும் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்க வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு செல்ல இருக்கிறார். அவருக்கு வருடத்திற்கு 35.59 மில்லியன் டொலர் சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன