டிசம்பரில் ஐ.தே.க. வின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் – ருவன் விஜயவர்தன

டிசம்பர் மாதமாகும் போது செயற்குழுவின் நம்பிக்கையை வென்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் என கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்ட அவர், கங்காராம விகாரையில் ஆசிர்வாதம் பெற்றதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் கட்சிக்காக செய்ய ​வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாகவும் நாட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் வெல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைத்து எதிர்கால பயணத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிலருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்களும் கட்சியின் மீது கொண்டுள்ள நேசத்தினால் அவர்களுடன் இணைந்து செயற்பட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!