இந்தியத் தூதுவரை சந்தித்தார் சுரேன் ராகவன்

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பால்கேவை இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த கால செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!