இரைச்சலிலிருந்து தப்பிக்க வீடுகளுக்கு ஒலி கவசம்
பரபரப்பான நகரத்துக்கு மத்தியில் உள்ள வீடுகள், போக்குவரத்து, கட்டுமான பணிகள் போன்றவற்றால் ஒலிமாசை எதிர்கொள்வதால் அவற்றை தடுக்க வீடுகளுக்கு ஒலி கவசம் அமைக்கும் புதிய தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் கண்டுபிடித்துள்ளது.
சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஒலியை உருவாக்கி ஒலியை தடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். சிங்கப்பூரில் சிறிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வேகமான ரயில்கள், விமானங்கள், கார் ஒலிப்பான்கள் போன்றவற்றால் இரைச்சலை எந்நேரமும் இரைச்சலை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர். சிறிய குடியிருப்பு என்பதால் ஜன்னல்களையும் மூடி வைத்துவிட்டு இருக்க முடியாது.
அவர்களுக்காக யோசித்து இந்த ஒலி கவசத்திற்கான புதிய தொழில்நுட்பத்தை நான்யாங் பல்கலை., ஆய்வு குழு முயற்சித்துள்ளது. இந்த ஒலி கவசம் 24 ஒலிபெருக்கிகளைக் கொண்டுள்ளது, அவற்றை குடியிருப்பில் உள்ள ஜன்னல்களில் பொருத்துகின்றனர். போக்குவரத்து அல்லது சுரங்கப்பாதை ரயில் போன்ற சத்தம் கண்டறியப்படும்போது ஸ்பீக்கர்கள் ஒலி அலையை உருவாக்கி, இரைச்சலை தடுக்கின்றது. ஹெட்போன்கள் எப்படி வேலை செய்கிறதோ அதே போன்று இவை வேலை செய்கின்றன.
இந்த கருவிகள் இருந்தால் ஜன்னலை திறந்தே வைத்திருக்கலாம். உள் வரும் ஒலி அளவு 10 டெசிபல்களாக குறைக்கப்படும். ஆனால் இது கணிக்க முடியாத, நாய்கள் குரைப்பது போன்ற உயர் அதிர்வெண் ஒலிகளைத் தடுக்காது. ஜன்னல்கள் திறந்து இருந்தால் ஏசி பயன்பாடு குறையும். தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் குறையும் என்கின்றனர்.