டிக்டாக், ஹலோ உட்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை!
டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலின் எதிரொலியாக, சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக விளங்கும் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடைசெய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
“இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு, பொது ஒழுங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைப்பதால்” இந்த 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.