மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை தடைசெய்யும் தீர்மானம் ஒத்திவைப்பு
இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தொடர்புபட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.