ஐலண்ட் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் சடலமாக கண்டெடுப்பு
ஐலண்ட் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் ஸக்கி ஜப்பார் கொழும்பின் புறநகர்ப்பகுதியான பெலவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இறந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தனித்து வாழ்ந்து வந்த 60 வயதுடைய ஜப்பார் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பணிக்கு சமூகமளித்திருக்கவில்லை என அவரோடு பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியாத போதும், அவர் இறந்து பல நாட்களாகியிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.