உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்ட கால எல்லை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஆனைக்குழுவின் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் செப்ரெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரையில் ஆணைக்குழுவின் கால எல்லை 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!