ராஜித உட்பட மூவருக்கு அழைப்பாணை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவரை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.