அபுதாபியில் இலங்கையர் பலி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எரிவாயு குழாய் ஒன்று வெடித்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்து மற்றுமொரு இலங்கையர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் இலங்கை தூதரகம் அந்நாட்டு பொலிஸாரிடம் இருந்து தகவல்களை பெற்று வருகின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.


இந்த விபத்து தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!