நவல்னி உடலில் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷம்

 நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷம் அலெக்ஸ் நவ்லனிக்கு கொடுக்கப்பட்டது என அவருக்கு சிகிச்சை அளித்த ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் பிரதான எதிர்கட்சி தலைவராக இருப்பவர் அலெக்ஸ் நவல்னி, அதிபர் விளாடிமிர் புட்டின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த வருகிறார். கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திக‌தி ஒம்சக் நகரிலிருந்து விமானம் மூலம் மாஸ்கோ சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப் பட்டது. விமானம் ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மோசமடைந்தது.

மேல் சிகிச்சைக்காக சிறப்பு விமானம் மூலம் ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நரம்பு மண்டலத்திற்கும் தசைகளுக்கும் இடையேயான தொடர்பை துண்டிக்கக்கூடிய நோவிசோக் எனப்படும் கொடிய விஷம் உடலில் கலந்திருப்பதை கண்டறிந்தனர். மருத்துவமனை அறிக்கையை ஜேர்மன் அரசும் வெளியிட்டது.

இது குறித்து ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியது, “நவல்னிக்கு கொடிய விஷம் கொடுத்துள்ளது அம்பலமாகிவிட்டது. இதற்கு ரஷ்ய அரசு நிச்சயம் பதில் சொல்லி ஆக வேண்டும்” என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!