வவுனியாவில் சுற்றுலா மையம்
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் வவுனியா நகரசபையால் அமைக்கப்பட்ட படகு சவாரி உட்பட பல்வேறு செயற்றிட்டங்களை உள்ளடக்கிய சுற்றுலா மையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இச்சுற்றுலா மையத்தினை வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் திறந்து வைத்தார். சுற்றுலா மையத்தில் படகு சவாரி , நீருக்கு நடுவில் பிரமாண்ட சிற்றுண்டிச்சாலை , சிறுவர்களுக்கான விநோத விளையாட்டுக்கள் , மீன் மசாஸ் , 3டி சினிமா , விடியோ கேம்ஸ் என்பன உள்ளன.