துபாய் பொலிஸ் துறையில் முதல் பெண் வெடிகுண்டு நிபுணர்

துபாய் பொலிஸ் துறையில் முதல் பெண் வெடிகுண்டு நிபுணர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இது குறித்து பொலிஸ் துறையின் பாதுகாப்பு மற்றும் அவசரகால பொது நிர்வாக பிரிவின் இயக்குனர் அப்துல்லா அலி அல் கைத்தி கூறியதாவது:-

”துபாயில் தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது பொலிஸ் துறையில் பணியாற்றிய ரீம் அப்துல் ரஹ்மான் அப்துல்லா அலி முதல் பெண் வெடிகுண்டு நிபுணராக பொறுப்பேற்று உள்ளார்.

வெடிகுண்டு பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக தற்போது அவருக்கு பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் இங்கிலாந்து நாட்டின் கிரான்பீல்டு பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டுகளை கையாளும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு பொலிஸ் துறை சார்பில் வாழ்த்துகள் தெரிவித்து கொள்ளப்படுகிறது” -இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!