20ஆவது திருத்தம் 3ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைப்பு
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 3ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுக் (26) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்காகவே 20 திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது.