கருணா குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில்  ஆஜராகியுள்ளார். 

விடுதலைப்புலிகளில் இருந்த காலத்தில் ஆனையிறவில் 3 ஆயிரம் இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக  நாவிதன்வெளி பிரசேத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருணா அம்மான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக வாக்கு மூலமொன்றைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!