தமிழர் தீர்வு தொடர்பில் வாய் திறக்காத ஜனாதிபதி – சாணக்கியன்

“கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலையளிக்கின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையின் எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாகவோ, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவோ எந்தவித கருத்துக்களையும் அவர் தெரிவிக்காமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தீர்வு ஒன்று இல்லாவிட்டால் தமிழ் மக்களின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதை தமிழ் மக்கள் மனதில் வைத்து இனிவரும் காலங்களில் செயற்பட வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!