தேசிய விளையாட்டு சபையின் தலைவராக மஹேல ஜயவர்தன
தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 13 பேர் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
சங்கக்கார (கிரிக்கெட் வீரர்), ஜூலியன் பொல்லிங் (நீச்சல் வீரர்), செயலாளர் : தியுமி அபேசிங்க (டெனிஸ் வீரர்), டிலந்த மலகமுவ (பந்தய வீரர்), யஸ்வந்தன் முத்தேகெத்துகம (கூடைப்பந்து வீரர்), சவேந்திர சில்வா (இராணுவ தளபதி), ராஜித அம்பேமோஹொட்டிய (மேஜர்), கஸ்தூரி வில்சன் (ஹேமஸ் CEO), ரொஹான் பெர்னாண்டோ (SLT CEO), ருவான் கெரகல (MAS Director), சுபுன் வீரசிங்க (Dialog CEO), சஞ்சீவ வீக்ரமநாயக்க (EWIS தலைவர்), எதிரிசிங்க (விளையாட்டு பணிப்பாளர்), ரொவீனா சமசரிங்க (விளையாட்டு சட்டத்தரணி) ஆகியோர் தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராவார்கள்.