பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு
9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர அவரது பெயரை முன்மொழிய, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா வழிமொழிந்தார். வாக்கெடுப்பின்றி பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராக வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார்.