மாலியில் இராணுவ புரட்சி ஜனாதிபதியும் பிரதமரும் கைது

மாலியில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளது.  அந்த நாட்டு ஜனாதியையும், பிரதமரையும் இரணுவத்தினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில்  இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை  இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக போரட்டம் நடந்து வந்தநிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர்,

 “தமது பதவியை ராஜினாமா செய்வதாகவும், தமது அதிகாரத்திற்காக மக்கள் ரத்தம் சிந்துவதை தாம் விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் தெரிவிக்கையில்,

“மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிப்பாக கவனித்து வருகிறது. முதலில் ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். அங்கு மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!