இந்திய வீராங்கனை சிக்கி ரெட்டி கொரோனாவால் பாதிப்பு
இந்திய முன்னணி பூப்பந்து வீரர்-வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் ஐதராபாத்தில் 7 ஆம் திகதிதி முதல் நடந்து வந்தது. உலக சாம்பியன் பி.வி.சிந்து, சாய் பிரனீத் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் தனித்தனியாக வந்து பயிற்சியாளர்கள் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி இந்த முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இந்திய இரட்டையர் பிரிவு வீராங்கனை என்.சிக்கி ரெட்டிக்கும், அவரது உடல்தகுதி நிபுணர் டாக்டர் சி.கிரனுக்கும் அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கிருமி நாசினி திரவம் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக பயிற்சி முகாம் மூடப்பட்டது.