உதைபந்தாட்ட தகுதிச் சுற்றுக்கள் ஒத்திவைப்பு
கட்டார் உலக கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2022-ல் நடக்கிறது. ஆசியக் கிண்ண உதைபந்தாட்டம் 2020-ல் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெற இருந்தன.
கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெற இருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும்.
பிபா வும், ஆசிய உதைபந்தாட்ட சங்கமும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.