கட்சிகள் பெற்றுக்கொண்ட மேலதிக ஆசனங்கள்
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொண்ட தேசிய பட்டியல் ஆசனங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 மேலதிக ஆசனங்கள் . ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்கள் . தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அபே ஜன பல கட்சி போன்றவற்றிகு தலா ஒரு ஆசனம் கிடைத்துள்ளன. இந்நிலையில் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமை, தற்போது வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் உறுதியாகி உள்ளது. |