இலங்கை பிரிமியர் போட்டியில் இர்பான் பதான்

இலங்கை கிரிக்கெட் சபை சார்பில் முதலாவது லங்கா பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும்  ஆகஸ்ட் 28-ஆம் திகதி முதல் செப்டம்பர் 20-ஆம் திகதி வரை  நடக்க இருக்கிறது. இதில் கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ள, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளில் இலங்கையை சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற இந்திய முன்னாள் சகலதுறை வீரர்  இர்பான் பதான், நியூஸிலாந்து அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உட்பட 70 வெளிநாட்டு வீரர்கள் லங்கா பிரிமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!