பிணைமுறி மோசடி: மைத்திரி – ரணிலிடம் வாக்குமூலம்!

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் எஸ். பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால், பதில் பொலிஸ்மா அதிபருக்கு இவ்வாறு பணிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்தார்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!