‘பெற்றோர் விவாக நிலை’, ‘இனம்’ பிறப்புச் சான்றிதழில் நீக்கப்படும்
பிறப்புச் சான்றிதழில் காணப்படும் ‘பெற்றோர் விவாக நிலை’ மற்றும் ‘இனம்’ ஆகிய விடயங்களை அகற்றுவதற்கு பதிவாளர் நாயகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தாய், தந்தை விவாகம் செய்துகொண்டுள்ளனரா எனும் விடயம் உள்ளடக்கப்படுவதன் காரணமாக, பல சிறார்கள் முகங்கொடுக்கும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே தெரிவித்தார்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் புதிய பிறப்புச் சான்றிதழ்கள் அவர்கள் இலங்கையர்கள் என்று கூறி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
புதிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இணையம் ஊடாக பிறப்புச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.