ராஜா ஸ்ரூடியோவை உருவாக்கி வரும் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் புதியதாக ராஜா ஸ்ரூடியோவை உருவாக்கி வருகிறார்.

இசையமைப்பாளர் இளையராஜா வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்ரூடியோவில் தனது பாடல்களைப் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எல்.வி.பிரசாத் இளையராஜாவுக்கு அங்கு இடம் வழங்கினார்.

எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத்தும், பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா ரெக்கார்டிங் ஸ்ரூடியோ வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத், இளையராஜாவை ஸ்ரூடியோவை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பினார். அப்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக திரையுகலம் திரண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பலன்கிடைக்கவில்லை. இளையராஜாவும் இனிமேல் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.

தற்போது இளையராஜா கோடம்பாக்கத்தில் எம்.எம்.பிரிவ்யூ தியேட்டரை ஒலிப்பதிவு ஸ்ரூடியோவாக மாற்றுவதற்காக வாங்கி இருக்கிறார். இந்த ஸ்ரூடியோவுக்கு ராஜா ஸ்ரூடியோ என்று பெயரிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராஜா ஸ்ரூடியோ செப்டம்பரில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!