அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை

அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாகாணத்தை சேர்ந்த டேனியல் லீ (வயது 47) என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த,மூன்று பேரை கொடூரமாகக் கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.அமெரிக்காவில், 17 ஆண்டுகளுக்குப் பின், ஒரு குற்றவாளிக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது முதல் முறையாகும்.

லீக்கு, விஷ ஊசி செலுத்தி, தண்டனையை நிறைவேற்ற, நேற்று நாள் குறிக்கப்பட்டிருந்தது.ஆனால் லீயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ‘கொரோனா’ வைரஸ் அச்சத்தால், தண்டனையை நிறைவேற்றுவதை நேரில் பார்க்க வர முடியாது என்பதால், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி நீதிமன்றத்தை அணுகினர். அதனைத் தொடர்ந்து இண்டியானா மாகாணத்தின் தெற்கு மாவட்ட நீதிமன்றம்மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அமெரிக்க மேல்முறையீட்டு மன்றில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட இண்டியானா நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் கொலை குற்றவாளி லீக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!