இலங்கையில் மேலும் 196பேருக்கு கொரோனா தொற்று
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 57 பேர் கொரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டனர். அங்குள்ள 252 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.